Developments

புதிய பணிகள்

சாமித்தோப்பில் கடந்த பன்னிரண்டு வருடங்களில் பல வளர்ச்சிப் பணிகள் நிறைவேறி உள்ளன. 1947 முதல் அய்யா வழி இயக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றது. பலரும் சாமித்தோப்பிற்கு வந்து அய்யா வைகுண்டரை வணங்கிச் செல்கின்றனர். 1947 ஆம் ஆண்டு முதல் பால பிரஜாபதி அடிகளார்; வருடா வருடம் அய்யா வைகுண்டர் ஊர்வலத்தை நடத்தி வைக்கத் துவங்கி உள்ளார். அதற்கு முன்னர் எந்த ஒரு ஊர்வல நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. அதற்கென அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுடைய ஆதரவைத் திரட்டி ஊர்வல நிகழ்ச்சியை நடத்தத் துவங்க அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. 1975 ஆம் ஆண்டு முதல் ஊர்வல நிகழ்ச்சிகள் துவங்கின.

கேரளத்தில் இருந்து வந்த பக்தர்கள் தேர் போன்ற அழகிய வாகனங்களை எடுத்து வந்து அதல் பங்கேற்றனர். இந்த ஊர்வல நிகழ்ச்சிகள்தான்; இந்தியா எங்கும் அய்யா வழி இயக்கம் பரவுவதற்குக் காரணம் ஆயிற்று. அது முதல் கன்யாகுமரியில் மாசி மாதத்தில் நடைபெறும் அந்த ஊர்வலம் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து அதில் பங்கேற்கின்றனர்.

மத நல்இணக்கம்- சமாதானப் பேச்சு வார்த்தைகள்

மண்டைக்காட்டு கலவரத்தினால் பல இந்து மதத் தலைவர்கள் தலைமறைவான பொழுது, பால பிரஜாபதி அடிகளாரும், குன்றக்குடி அடிகளாரும் அமைதி குழு அமைத்து மதத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, மேலும் பல முயற்சிகள் எடுக்க இருதரப்பு மதத் தலைவர்களிடையே சமாதானம் ஏற்பட்டு அந்த இடங்களில் அமைதி திரும்பியது. ஆயிற்று. அது முதல் கன்யாகுமரியில் மாசி மாதத்தில் நடைபெறும் அந்த ஊர்வலம் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. பல மதத் தலைவர்களும் சாமித்தோப்பிற்கு வந்து அய்யா வைகுண்டரைப் பற்றி  விவரம் அறிந்து கொண்டும் விவாதித்து விட்டும் சென்றனர். கோட்டுர் டிகோஸ் பாதிரியார், ஜப்பான் நாட்டு புத்தமதத் தலைவர்கள் மற்றும் தென் இந்திய முஸ்லிம் மதத் தலைவர்கள் போன்றவர்கள் சாமித்தோப்பிற்கு வந்து அய்யா பற்றிய பெருமைகளை தெரிந்து கொண்டு சென்றனர்.

அய்யா வழி மாநாடு

அய்யா வழி இயக்கத்தைப் பரப்பும் முயற்சிக்கென மாநாடுகள் நடத்தப்பட்டன. முக்கியமாக அய்யா வழி பக்தர்களை ஒன்றிணைக்கும் பாலமாக அவை திகழ்ந்தன.  முதல் மாநாடு மார்த்தாண்டத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.  அதன் பின் வேலூர், ஆறுமுகனேறி, சென்னை, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கன்யாகுமரி மாவட்டத்தின் அனைத்துத் தாலுக்காக்களிலும் மாநாடுகள் நடைபெற்றன. குருமார்களும், பல்வேறு அறிஞர்களும் அய்யா வழி இயக்கத்தின் பெருமைகளையும், தத்துவங்களையும் விவரமாக எடுத்துக் கூறினர். ஏடுவாசித்தலும், அகிலத்திரட்டு நூலின் விளக்க உரையும் அந்த மாநாடுகளில் முக்கிய நிகழ்ச்சியாயின. மாநாட்டில் ஊர்வல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  அதன் முடிவில் வரும் காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.; பிற மதத் தலைவர்களும் அந்த மாநாடுகளில் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

புதிய தேர்வாகனம், மற்றும் கொடி மண்டபம்;

நான்கு லட்ச ரூபாய் செலவில் 1978 ஆம் ஆண்டில் ஆலயத்திகு புதிய தேர் கட்டப்பட்டது. அதற்கு முன்பிருந்த தேர் நூறு ஆண்டுகள் தொடர்ந்து உபயோகத்தில் இருந்து பழையதாகி விட்டதினால் புதிய தேர் வாகனம் தேவைப்பட்டது. பழைய தேரினை கன்யாகுமரி மாவட்ட காட்சியகத்திற்கு தானமாகத் தந்து விட்டனர்.  பால பிரஜாபதி அடிகளாருடைய அறிவுறைப்படி சென்னவன்னன்வில்லையைச் சேர்ந்த திரு தங்க நாடார் புதிய தேர் செய்யத் தேவையான நன்கொடைகளை வசூலித்தார். திரு அரிராமகிருஷ்ண நாடாரின் நன்கொடையைக் கொண்டு 1990 ஆம் ஆண்டு கொடிமண்டபம் கட்டப்பட்டது.

அய்யா வழி அன்புகோடி மக்கள் திருச்சபை

அய்யா வழி திருச்சபை சமிபத்தில் துவக்கப்பட்டது. ஒவ்ஒரு கிராமத்திலும் அதற்கான நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவை மேலும் பல பகுதிகளில் விரிவாக்கப்பட்டு   அவை ஒவ்ஒன்றுக்கும் தனித்தனியான பொறுப்புக்கள் தரப்பட்டு உள்ளன. அந்த திருச்சபைகளுக்கான சட்ட திட்டங்களை பால பிரஜாபதி அடிகளார் வகுத்துள்ளார். இப்படியாக ஆயிரக்கணக்கான கிராமப்புற திருச்சபைகள் நிறுவப்பட்டு உள்ளன.

அய்யா வைகுண்டர் பிறந்த நாள் திருவிழா – விடுமுறை

அய்யா வைகுண்டருடைய பிறந்த நாள் பெருவிழா விமர்ச்சையாக நடைபெறுகின்றது. அன்றைய தினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமித்தோப்பிற்கு வந்து ஆலயத்தில் வணங்கிச் செல்கின்றனர்.  அய்யா வைகுண்டருடைய பிறந்த தினமான மாசி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை எற்று அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் அறநிலைய அமைச்சர் திரு நடேசன் பால்ராஜ் மற்றும்  கன்யாகுமரி மாவட்ட மானில மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியே அதற்குக் காரணமாக இருந்தது.

நன்றி சாந்திப்பிரியா
Close Bitnami banner
Bitnami